ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பிரித்தானியாவும் ஆதரவு!
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை, பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற “சிறிலங்காவின் மனித உரிமைகள்“ என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வரும் தீர்மானத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்