தனிமையிலிருந்த சீரற்ற இயங்கு திறன் கொண்ட இளம் பெண்ணை, வலுக்கட்டாயமாக பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய இரண்டு முஸ்லீம்கள் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் காரைநகர் சிவகாமி அம்மன் வீதியில் இடம்பெற்றுள்ளது.
பழைய இரும்புக்களை வாங்குவதற்காக ஆட்டோ ஒன்றில் மேற்படி வீட்டிற்கு இரண்டு முஸ்லிம்கள் சென்றுள்ளனர். அங்கே, சீரற்ற இயங்கு திறன் கொண்ட தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிமையில் இருந்துள்ளனர்.
தாய் உள்ளே சென்ற சமயம் மேற்படி இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக இரண்டு முஸ்லிம்களும் இணைந்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களது செயல்களைப்பொறுக்க முடியாத பெண் கூச்சலிட்டு கத்தியபோது இருவரும் ஆட்டோவுடன் தப்பிச்சென்றுள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் யாழ்.ஜந்து சந்தியிலிருந்து 9 முச்சக்கர வண்டியில் இரும்பு ஏற்றுவதற்காக முஸ்லிம்கள் காரைநகருக்கு சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த காரைநகர் இளைஞர்கள் ஒவ்வொரு ஆட்டோவாக சல்லடைபோட்டு சோதனை நடத்தியதோடு சூத்திரதாரிகளை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், காரைநகரிலுள்ள கோவளம் வெளிச்ச வீட்டில் வைத்து இருவரையும் மடக்கிபிடித்த இளைஞர்கள் அவர்கள் இருவரையும் அழைத்து வந்து அடையாள வகுப்பிற்குட்படுத்தினார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் இருவரையும் அடையாளப்படுத்தியதும் நையப்புடைத்து எடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அவர்களை விடுவிக்க முற்பட்டனர்.
ஆனால் பொது மக்கள் வீதியில் பனைக்குற்றிகளை போட்டு மறியல் போரட்டம் நடத்தியதோடு நீதிமன்றிலேயே இருவரையும் ஒப்படைப்போம் என பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் பொது மக்களும் உடன்பாட்டுக்கு வந்ததைத தொடர்ந்து இருவரையும் பொலிஸார் அடித்து இழுத்துச்சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தற்போது மேற்படி இருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் காரைநகரில மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் இன்று கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.