Reality, Ability, Genuine, Unity — உண்மை, ஆற்றல், நேர்மை, ஒற்றுமை.

மக்களின் உரிமைகள் அனைத்தையும் பீரிஸ், ஹிலாரியிடம் அடகு வைத்துள்ளார்: தம்பர அமில தேரர்

நாட்டில் இனவாதத்தை போஷிக்கும் பொறுப்பினை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக காலணித்துவ எதிர்ப்பு தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனவாதம் வளர்வதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் பொறுப்பு சொல்ல வேண்டும். நாட்டு மக்களின் மொத்த உரிமைகளையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனிடம் அடகு வைத்துள்ளார்.

நாடு அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ளது. காலணித்துவ சக்திகளுக்கு எதிராக வலுவான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது.

நாட்டில் இன மற்றும் மாதவாதம் தலைதூக்க அரசியல் தலைவர்களே காரணம். இதனைத் தடுத்து நிறுத்த ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர்.

வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளே நாட்டுக்குள் காலணித்துவ சக்திகள் ஊடுருவக் காரணம் என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

21

05 2012

மட்டக்களப்பில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அண்மையில் காத்தான்குடி பிரதேசத்தில் வீடுகள் உடைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கொள்ளைகள் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரச்சன்னவின் வழிகாட்டலில், பொலிஸ் பரிசோதகர் அமரசிறியின் தலைமையில் தாகா, பிரணவன், கிருபா, குமார ஆகிய மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

புதியகாத்தான்குடியை சேர்ந்த முகம்மட் அஸ்ன்(அஸ்கி), தாழங்குடா பெரியதம்பிரான் வீதியை சேர்ந்த த.பிரதீபன்( 24வயது) அதே விலாசத்தை சேர்ந்த ஏ.நந்திகுமார் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து பெருமளவான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைத்தொலைபேசிகள், துவிச்சக்கரவண்டி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இவர்கள் கொள்ளைகளுக்கு பயன்படுத்தியதாக கருதப்படும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

21

05 2012

குடும்பிமலைப் பிரதேசத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று குடும்பிமலைப் பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள ஆலயத்தில் பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டார். கிழக்கிலங்கையிலே மிகவும் புராதனமானதும் வரலாற்றுச் சிறப்பு வாய்ததுமான குடும்பிலை ஆலயத்திற்கு முதல்வர் சந்திரகாந்தன் நேரில் சென்று ஆலயத்தின் நிருவாகசபை உறுப்பினர்களோடு கலந்துரையாடி எதிர் காலத்தில் ஆலயத்தின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதாவும் அவர் தெரிவித்தார்.
 

21

05 2012

கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவைகளையும், அவரின் மக்கள் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மட்டக்களப்புக்கு வந்தபோதுதான் உணர்ந்து கொண்டேன் – தமிழருவி சிவகுமரன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு செய்திருக்கின்ற சேவைகளையும், அவருக்கிருக்கின்ற மக்கள் செல்வாக்கினையும் மட்டக்களப்புக்கு வந்தபோது நேரடியாக உணர்ந்து கொண்டேன் இவ்வாறு தமிழருவி சிவகுமரன் அவர்கள் மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் செவ்வாழை சஞ்சிகை வெளியீடு (18.05.2012) கல்லூரியில் நடைபெற்றபோது சஞ்சிகை விமர்சன உரையினை நிகழ்த்தும் போதே இவ்வாறு கூறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் எங்களுடைய பிரதேசங்களிலே மட்டக்களப்பைப் பற்றியும், கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பற்றியும் தவறாண எண்ணங்கள் இருக்கின்றன. மட்டக்களப்பு மக்கள் மோசமானவர்கள் மந்திரவாதிகள் பாயோடு ஒட்ட வைத்து விடுவார்கள் போனால் திரும்பி வர முடியாமல் வசியம் செய்து விடுவார்கள் என்றெல்லாம் மட்டக்களப்பைப் பற்றி தவறாகப் பேசுவார்கள்.

நான் மட்டக்களப்புக்கு வந்தபோதுதான் உண்மையினை அறிந்தேன். மட்டக்களப்புக்கு வருபவர்கள் பாயோடு ஒட்டி விடமாட்டார்கள் பாயிலே படுத்து விடுவார்கள். அந்தளவிற்கு மட்டக்களப்பு மக்களின் உபசரிப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றது. மட்டக்களப்பு மக்கள் வசியம் செய்வதனால் பாயில் ஒட்டுவதில்லை நம்மவர்கள் மட்டக்களப்பு மக்களின் உபசரிப்பில் மயங்கி பாயில் படுத்துவிடுவார்கள் நம்மவர்கள்.

மறு புறத்திலே கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பற்றி தவறான எண்ணம், அபிப்பிராயம் எங்கள் பிரதேசங்களிலே இருக்கின்றது. அதற்கு காரணம் தவறான விமர்சனங்கள் முதலமைச்சரைப் பற்றி வெளிவருவாதாகும். ஆனாலும் முதலமைச்சர் அவர்கள் நல்ல பல விடயங்களை செய்கின்றார் என்பதனை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். மட்டக்களப்புக்கு வந்தபோதுதான் அவரின் சேவைகளைக் கண்டு வியந்து நிற்கின்றேன். இப்பாடசாலையின் அதிபர் மற்றும் மக்களின் மூலமாக முதலமைச்சர் அவர்களின் சேவைகளை அறிந்தேன். அவர் மட்டக்களப்புக்கு செய்திருக்கின்ற பல அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக பார்க்கின்றபோது சந்தோசப் பட்டேன்.மட்டக்களப்பு மக்கள் முதலமைச்சர் மீது அதிக பற்றும், நம்பிக்கையும் வைத்திருப்பதை உணர்ந்து கொண்டேன். என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், அதிதிகளாக மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், திரவியம், வலயக்கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

 

21

05 2012

நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் பேஸ்புக் நிறுவுனர் சுகர்பேர்க்

இல்லறவாழ்வில் தம்பதிகளாக ஒன்றிணைவதற்கான ஊடகமாக இருந்து வரும் சமூக வலையமைப்பான பேஸ்புக்

நிறுவுநர் மார்க் சுகர்பேர்க் தனது நீண்டநாள் காதலியான பிரிஸ்ஸிலா சானை திருமணம் செய்துள்ளார்.
இவ்வாரம் சுக்கர் பேர்க்கின் 28 ஆவது பிறந்த தினமும் சின்னுக்கு மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளன.
கலிபோர்னியாவின் பாலோ அல்ரோவிலுள்ள சுக்கர் பேர்க்கின் இல்லத்தில் இவ்விருவருக்கும் எளிமையான முறையிலே திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கான மோதிரம் சிவப்புக் கல் வைக்கப்பட்டு எளிய வடிவிலே சுக்கர் பேக்கினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு பேஸ்புக்கினை வடிவமைத்திருந்த போதே ஹாவாட் பல்கலைக்கழகத்தில் இவ்விருவரும் முதன்முதலில் சந்தித்திருந்தனர்.

Zuckerberg2

21

05 2012

குருநாகல் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு எதிர்ப்பு

குருநாகல் புத்தளம் வீதியில் ஆரிய சிங்களவத்த கிராமத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கங்வல ரஜமகா விகாரையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளருடன் பேசி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் இந்த இடத்தில் கட்டிடம் ஆரம்பிப்பதில் இந்தப் பிரதேச மக்களிடையே அமைதியின்மை நிலவியபோது பௌத்த மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை அடுத்து சமாதானமாகப் பேசித் தீர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தையினை அடுத்து இரு தரப்பினரிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிப்பதில்லை எனவும் முஸ்லிம் குர்ஆன் பாடசாலையை மட்டும் முன்னெடுத்துச் செல்வது எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரும்பான்மை சமூகத்தினர்கள் ஒரு சில முஸ்லிம் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு கையொப்பத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

21

05 2012

நூல் அறிமுக விழா

அருணாச்சலம் குமாரதுரை அவர்களின் “இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளும் பதிவுகளும்” நூலின் அறிமுக விழா அண்மையில் திருகோணமலையில் இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இன்நிகழ்வு திருமலை நவம் தலமையில் கிழக்கு பல்கலைக்கழக அரசியல் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கிருஸ்ணமோகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.மேலும் நூலின் அறிமுக உரையினை அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான காயத்திரி நளினகாந்தன் அவர்கள் நிகழ்த்தினார். இன்நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியார்கள் எழுத்தாளார்கள் பல்கலைக்கழக மாணவர்கள் திருமலையின் மூத்த குடிமகன் காந்திப்பெரியார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

20

05 2012

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீமை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் கவனம்

ழக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நிறுத்துவது குறித்து, எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து சரத் பொன்சேகாவை தேர்தலில் நிறுத்தியதனைப் போன்று, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஹக்கீமை நிறுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளராக ஹக்கீமை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறு முஸ்லிம் கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன.

சிறு சிறு முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொள்வது குறித்து முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். வேட்பாளர்களை எவ்வாறு நிறுத்துவது என்பது தொடர்பிலும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

20

05 2012

இலங்கை மாணவி மீது இந்தியாவில் தாக்குதல்!

இந்தியாவின் கானல் மாவட்டத்திலுள்ள தேசிய பாற்பண்ணை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வில் ஈடுபட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த கலாநிதிப் பட்டம் பெற்ற மாணவியொருவர் நேற்று முன்நாள் வியாழக்கிழமை இனந்தெரியாத இளைஞர் கும்பலின் தாக்குதலுக்குள்ளான நிலையில் படுகாயமடைந்துள்ளார்.

பாற்பண்ணை தொழில் நுட்ப திணைக்களத்தைச் சேர்ந்த 42 வயதான நாரயண என்பவரே தாக்குதலுக்குள்ளான நிலையில் படுகாயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலையில் படுகாயமடைந்த இவர் ஆபத்தான நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையிலிருந்து முச்சக்கரவண்டியில் பல்கலைக்கழக விடுதிக்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.

20

05 2012

முஸ்லிம்கள் யாழில் வலுவிழந்த பெண்ணை துஸ்பிரயோகம்

தனிமையிலிருந்த சீரற்ற இயங்கு திறன் கொண்ட இளம் பெண்ணை, வலுக்கட்டாயமாக பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய இரண்டு முஸ்லீம்கள் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் காரைநகர் சிவகாமி அம்மன் வீதியில் இடம்பெற்றுள்ளது.

பழைய இரும்புக்களை வாங்குவதற்காக ஆட்டோ ஒன்றில் மேற்படி வீட்டிற்கு இரண்டு முஸ்லிம்கள் சென்றுள்ளனர். அங்கே, சீரற்ற இயங்கு திறன் கொண்ட தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிமையில் இருந்துள்ளனர்.

தாய் உள்ளே சென்ற சமயம் மேற்படி இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக இரண்டு முஸ்லிம்களும் இணைந்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களது செயல்களைப்பொறுக்க முடியாத பெண் கூச்சலிட்டு கத்தியபோது இருவரும் ஆட்டோவுடன் தப்பிச்சென்றுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் யாழ்.ஜந்து சந்தியிலிருந்து 9 முச்சக்கர வண்டியில் இரும்பு ஏற்றுவதற்காக முஸ்லிம்கள் காரைநகருக்கு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த காரைநகர் இளைஞர்கள் ஒவ்வொரு ஆட்டோவாக சல்லடைபோட்டு சோதனை நடத்தியதோடு சூத்திரதாரிகளை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், காரைநகரிலுள்ள கோவளம் வெளிச்ச வீட்டில் வைத்து இருவரையும் மடக்கிபிடித்த இளைஞர்கள் அவர்கள் இருவரையும் அழைத்து வந்து அடையாள வகுப்பிற்குட்படுத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் இருவரையும் அடையாளப்படுத்தியதும் நையப்புடைத்து எடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அவர்களை விடுவிக்க முற்பட்டனர்.

ஆனால் பொது மக்கள் வீதியில் பனைக்குற்றிகளை போட்டு மறியல் போரட்டம் நடத்தியதோடு நீதிமன்றிலேயே இருவரையும் ஒப்படைப்போம் என பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் பொது மக்களும் உடன்பாட்டுக்கு வந்ததைத தொடர்ந்து இருவரையும் பொலிஸார் அடித்து இழுத்துச்சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தற்போது மேற்படி இருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் காரைநகரில மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் இன்று கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20

05 2012