Reality, Ability, Genuine, Unity — உண்மை, ஆற்றல், நேர்மை, ஒற்றுமை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பிரித்தானியாவும் ஆதரவு!

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை, பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற “சிறிலங்காவின் மனித உரிமைகள்“ என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வரும் தீர்மானத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்

23

02 2012

ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளில் ஐந்து நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதி

எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளின் போது இதுவரை ஐந்து நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.சீனா, ரஸ்யா, கியூபா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளே இவ்வாறு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.

26 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தயாராகி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்குமாறு சில நாடுகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

23

02 2012

கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர்வரும் 27ந் திகதி.

எதிர்வரும் 28ந் திகதி இடம்பெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வானது ஒரு நாள் முந்தியே(27.02.2012) கூட இருப்பதாக மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார். தற்போது மாகாண சபைகளின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நாடு நகரத்தி திருத்தச் சட்டமூலம் கடந்த 13.02.2012ந் கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்திற்கு சமர்ப்பித்த போது அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து தரும்படி திரும்ப அனுப்பட்டிருந்தது. அப்போது எதிர்வரும் சபை அமர்வு 28.02.2012 அன்று கூடும் எனவும் தவிசாளர் பாயிஸ் அவர்கள் தெரிவித்திருந்தாh. ஆனால் தற்போது ஒருநாள் முந்தி கூடப்படவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் திருத்தங்களளுடன் கூடிய நாடு நகரத்திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

23

02 2012

தரிசனம்கொடி வாரம்-2012.

தரிசனம் விழப்புலனற்றோர் தேசிய கொடிவாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் பாடசாலை இதனை வருடாவருடம் அனுஸ்டிப்பது வழமை. இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே (22.02.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுகு;கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு விழப்புலனற்றோர் பாடசாலையின் நிருவாகிகள் மற்றும் அங்குள்ள மாணவர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

23

02 2012

பெண்ணின் கற்பைச் சூறையாடிய மூன்று காமுகர்கள் கை து

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் கற்பை சூறையாடி, அவர் பணிபுரிந்த வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற மூன்று சந்தேகநபர்களை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஐக்கிய அரபு இராச்சியத்தில், இலங்கைப் பெண் பணிபுரியும் வீட்டில் தனியாக இருந்த வேளை, 19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்கள் குறித்த வீட்டில் திடீரென நுழைந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதோடு மேலும் இருவர் தனிமையில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து வீட்டிற்கு வந்த வீட்டு உரிமையாளர் இலங்கைப் பெண்ணின் நிலையை கண்டும் சம்பவத்தை நினைத்தும் அதிர்ந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவள் அழுது கொண்டே இருந்தாள், அவளை சமாதானப்படுத்த எனக்கு நீண்ட நேரம் சென்றது. ´மூன்று இளைஞர்கள் வீட்டினுள் நுழைந்து என்னை கற்பழித்தனர்´ என அப்பெண் என்னிடம் கூறினாள்” என வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார். சார்ஜா பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விரைந்து செயற்பட்டு மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

23

02 2012

பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதிவரை இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு! சரியான தகவல் வழங்குமாறு கோரிக்கை

இலங்கையில் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சனத்தொகை கணக்கெடுப்பில், தாம் கணக்கெடுக்கப்படுவதை மக்கள் உறுதிசெய்ய வேண்டுமென தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.சகல பிரஜைகளும் சரியான தகவல்களை வழங்குவதும். மக்கள் வழங்கிய தகவல்களை திணைக்கள ஊழியர்கள் இரகசியமாக வைத்திருப்பதும் சட்டப்படி கட்டாயமானதாகும் என திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டி.பீ.பி. வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு உத்தியோகஸ்தர்களை, திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அணிந்திருக்கும் தொப்பி, அவர்கள் வைத்திருக்கும் சனத்தொகை, வீடுகள் தொகைமதிப்பு இலச்சினையுடன் கூடிய கோவை என்பவற்றின் மூலம் அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்தார்.

குடியிருப்பதற்கு வீடில்லாமல் இருப்பவர்கள் மார்ச் 19 ஆம் திகதி அவர்கள் இரவில் படுத்துறங்கும் இடத்தில் வைத்து கணக்கெடுக்கப்படுவர் எனவும் இவர்கள் கணக்கெடுக்கப்பட்டவர்கள் என்பதை உறுதிசெய்யும் அடையாள அட்டையொன்றும் இவர்களுக்கு வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டை இலக்கம், பிறந்த திகதி, மாவட்டம், கல்வித் தகைமைகள், தொழிற்பயிற்சி, தொழில்வாண்மை, கணினி அறிவு, தொழில், பொருளாதார செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் திரட்டப்படவுள்ளதால் மக்கள இவற்றை ஆயத்தமாக வைத்திருப்பது வேலையை இலகுவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

23

02 2012

மேரி கொல்வின் மகத்தான ஊடகவியலாளர்.

மேரி கொல்வின் மகத்தான ஊடகவியலாளர். ஊடகத்துறைக்கு பெருமை சேர்த்தவர். அமெரிக்காவில் பிறந்தவர். பிரிட்டிஷ் சண்டே டைம்ஸ் செய்தியாளர். சிரியாவிலே சர்வாதிகாரி அசாத்தின் படைகளால் அவர் இன்று கொல்லப்பட்டுவிட்டார்

மேரி நமது நாட்டிற்கு பழக்கமானவர். எனக்கும் நன்கு அறிமுகமானவர். உலகில் எங்கெங்கு போர் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, குண்டு வீச்சு மழைக்கு மத்தியில், பலருக்கு முடியாத, எவரும் துணியாத, பல தகவல்களை படங்களுடன் திரட்டி உலகிற்கு வழங்கிய வீரமங்கை அவர். இலங்கை போர் தொடர்பிலே துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு கண்ணையும் நம் நாட்டிலேயே இழந்தவர். நமது துன்பங்களை உலகறிய செய்த வீரமங்கை அவர்.

மகத்தான மனிதர்கள் சாவதில்லை. ஏனென்றால் ஆபத்து வருகின்றது என்று அறிந்த நிலையிலும் தாம் வகுத்துக்கொண்ட பாதையில் துணிச்சலுடன் செயல்படுபவர்கள்தான் மகத்தான மனிதர்கள்.

மேரி கொல்வினும் ஆபத்து மிக்க தனது தொழிலில் ஒரு நாள் சாவு வரும் என்று அறிந்தே இருந்தார். ஆகவே அவர் சாகவில்லை. மகத்தான மனிதர்களுக்கு மரணம் கிடையாது. அவர்கள் நாமம் வாழும். அவர்களது சாதனைகள் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

எதிர்காலத்தில் தோன்றபோகும் எத்தனையோ இளம் ஆண்-பெண் ஊடகவியலாளர்களின் ஊடாக மேரி வாழ்வார். உலகம் உள்ளவரை வாழ்வார்.2001ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற மோதலில் மேரி கொல்வின் தனது கண்களில் ஒன்றை இழந்தார்.

23

02 2012

தமிழர்களின் அரசியல் நகர்வை ஒருபடி உயர்த்திய மாமனிதன்

அண்மையில் திருக்கோணமலையில் அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களின் நினைவுப்பேருரை பெருந்;தெரு மகாவித்தியாலயத்தில் எழுத்தாளர் அருளானந்தம் தலைமையில் நடைபெற்றது இதன் போது யாழ் பல்கலைக்கழக தகைசார் வாழ்நாட் போரசிரியார் சண்முகதாஸ் மற்றும் பல பிரமுகர்கள்;; நினைவுரை நிகழ்த்தினார்கள். இதன் போது அன்னார் தான் சார்ந்த சமூகத்திற்காக செய்த சேவைகள் மற்றும் பணிகள் நினைவு கூறப்பட்டது. இன்நிகழ்வை திருக்கோணமலை கல்விச்சமூகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இன் நிகழ்வானது காலம் கடந்த நிகழ்வாக இருந்தாலும் வரவேற்கத்தக்க நிகழ்வாகவே பார்க்;கப்படுகின்றது அன்னார் தனது அரசியல் நகர்வை மிகவும் சாணக்கியமாகவும் துணிச்சலாவும் நகத்தினார்.குறிப்பாக தனது மக்களின் கல்விக்காக அவர்செய்த பணிகள் காத்திரமானவை மேலும் தமிழ் சமூகத்தின் அரசியல் வராலாற்றிலே தான் சார்ந்த சமூகத்தின் அபிவிருத்திக்காக முதன்மையாக உழைத்த அரசியல்வாதிகளின் போற்றப்படவேண்டிய மனிதன் தங்கத்துரை அவர்கள் ஆவர்கள்.
அன்னார் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி என்னும் இடத்தில் பிறந்தார்.தங்கத்துரை அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை திஃகிளிவெட்டி அ.த.க பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக்கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார்.பின்னர் 1979-1980 இல் கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியை கற்று சட்டத்தரணியானார். எனினும் அவரது அரசியல் பயணத்தில் 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக்கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவுசெய்யப்பட்ட அ.தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார். அந்த நாள்; தொடக்கம் அவர் இறக்கும் வரை தமிழ் மக்களின் அபிவிருத்திக்கான உரிமைக்காகவும் மற்றும் அரசியல் விடிவுக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய மாமனிதன் அமரார் தங்கத்துரையாவார். தனது உரிமைக்காக போரடிக்கொண்டிருக்கும் சிறுபான்மை இனத்தின் மக்கள் பிரதிநிதி எவ்வாறு செயற்படவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செயற்படுத்தியவர்.
குறிப்பாக கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திஇகுடியேற்றம் மற்றும் வீதி அபிருவித்தி பாலங்கள் நிர்மாணம் நீர்ப்பாசனத்துறை சார்;ந்த அபிருத்தி சமூகப்பொருளாதாரத்துறை சார்ந்த அபிவித்திகளை தனது திறமையான தலைமைத்துவத்தின் மூலம் திறம்பட செயற்படுத்தினார் மேலும் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரசதிணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதில் தங்கத்துரை அவர்களுக்கு நிகர் அவர்களே என்னும் அளவிற்கு சிறப்பான முறையில் செய்தார். மூம்மொழியிலும் தேர்ச்சிபெற்றதால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொதுமக்களுடைய பல்வேறு அரசதுறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக்கொடுக்கக் கூடியதாக இருந்தது. அமரர் தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970-1977 காலப்பகுதியில் பதவி வகித்துள்ளார். மேலும் தனது சொந்த ஊரான கிளிவெட்டிப்பிரதேசத்தில் சிங்களக்குடியேற்றத்தினை வெற்றிகரமாக தடுத்து மூதூரை பாதுகாக்க எடுத்த முயற்சியின் பயனாக இவர் கைது செய்யப்பட்டு 8 மாதங்கள் சிறையில் இருந்தார்
1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் அமோக ஆதரவைப்பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். திருகோணமலை மாவட்ட அவிருத்திச்சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அன்னார் மக்கள் தொண்டனாக திருககோணமலை மாவட்டதமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு சேவை செய்தார்.திருகோணமலை மாவட்ட சமூகப்பொருளாதார கல்வி கலாச்சார அவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக்கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.இருப்பினும் 1994 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இதன் மூலமாக அவர் தனது சேவைகளை விஸ்தரித்துக்கொண்டார்.குறிப்பாக பாடசாலைகளுக்க பௌதீக வளங்களைப்பெற்று கொடுப்பதில் பாரிய பங்கை மேற்கொண்டது மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் மீள்ச்சிக்கு கல்வியே சிறந்த வழி என முழுமையாக நம்பினார்.சுகாதர சேவையை மேம்பாடுத்தும் முகமாக பல கிராமங்களில் கிராம வைத்தியாசாலைகளை அமைத்தார்.
மேலும் தனது தரிசனப்பார்வையின் மூலமாக சாணக்கியத்தாலும் சிங்களக்குடியேற்றங்களை தடுத்தார். முதலாவதாக தொடர் சிங்கள குடியேற்றம் தமிழ் பகுதிகளில் ஊடுஉருவாது தடுக்கும் முகமாக தங்கபுரம் குமாரபுரம் குடியேற்றங்களை நிறுவி அலிஒலுவ வரை சிங்கள குடியேற்றத்தை மட்டுப்படுத்தினார். இதேபோன்று தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் குடியேற்றம் அமைக்க ஏதுவான காரணிகளை இல்லாது ஒழித்து குடியேற்றத்தை தடுக்க அவர் கிளிவெட்டியில் அமைத்த துணிந்து அழித்த அரசமர சரித்திரம் நாடறிந்த சம்பவமாகும். இதனால் இன்றும் கிளிவெட்டி தமிழ் மணத்துடன் மிடுக்காக மிளிர்வதற்கு வழிசமைத்தார் இவ்வாறு இவர் அமைத்த மிகிந்தபுரம் தொழில்நுட்பகல்லூரியானது திருகோணமலை மாவட்ட இளம் சமூகம் நீண்டகாலமாக கடற்படைத்தளத்திலும் இலங்கை துறைமுக அதிகாரசபையிலும் கூலித்தொழில்படையாக படையெடுத்த சகாப்த்திற்கு முற்றுப்புள்ளி இட்டதுடன் தொழில் திறன் உடைய தொழில் நிபுணத்துவம் கொண்ட தொழிற்படை உருவாக்கத்திற்கு காரணமானார். மேலும் தொழில்நுட்பகல்லூரி மகிந்தபுரத்தில் உருவாக்கியதன் மூலமாக அன்புவழிபுரம் வரோதயநகர் பகுதிகளில் சிங்களவர்கள் தொடராக குடியேற முடியாத தடுப்பு சுவராக மாறியுள்ளதை இன்று வியப்பின் விளிப்பில் நின்று பார்க்ககூடியதாக உள்ளது. இதேபோன்று கணேசாநகர் குடியேற்றமும் தனித்சிங்களகுடியேற்றத்தை தடுப்பதோடு பாலையூற்று தமிழ் கிரமாத்தின் தடுப்பு சுவராக அமைந்துள்ளது இவை இவரது தொலைநோக்கையும் ஆற்றலையும் அரசியல் சாணக்கியத்தையும் பெருமையுடன் பகரும் சான்றுகளாகும்.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் அமைக்கவும் காரணகருத்தாகவும் இருந்ததோடு அதற்கான அமைவிடத்தை தனித்தமிழர் பிரதேசமான நிலாவெளி சாம்பல் தீவு பகுதிகளுக்கிடையிலான கோணெசபுரியில் தெரிவு செய்தமை இவர் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பைகட்டியம் கூறிநிற்கின்றது ஏனெனில் இப்பிரதேசம் நீண்டகாலமாக அடிப்படை வசதியற்ற பகுதியாகவே காண்பபட்டது.இங்கு வளாகம் அமைக்க தொடங்கிய காலம் முதல் தமிழ் மக்களது குடியிருப்புகள் அதிகரித்ததுடன் அடிப்படை தேவையான மின்சாரம் நீர் பாதையமைப்பு என்பன விரைவாக மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது இம்மக்களது வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றமை இத்திட்டத்தின் நீண்டகால பயன்பாடுகளாக அல்லது தாக்கங்களாக (ஐஅpயஉவ) நோக்ககூடியதாக உள்ளது ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த மனமாற்றத்தை (ளுநடக வசயளெகழசஅயவழைn) ஒருதலைவன் எவ்வாறு திட்டமிட்டு மேற்கொண்டார் என்பதற்கு இதை விட ஒரு உதாரணத்தை முன்வைக்க முடியாது என்றே கூறலாம்.

இருப்பினும் தமிழ்தேசியப்போரட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் தங்கள் கண்களை தங்களே குற்றிக்கொண்ட சம்பவங்கள் பல அதில் ஒன்றுதான் அமரார் தங்கத்துரை அவர்களின் மரணமும். இவர் 1997 ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஐந்தாம் திகதி திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டத்திறப்பு விழாவினை தொடர்ந்து கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் போது இக்கல்லூரி அதிபர் திருமதி இராஜஸ்வரி தனபாலசிங்கம் உட்பட 4 புத்திஜீவிகளும் கொலை செய்யப்பட்டார்கள். இம்மாமனிதனின் இடைவெளியை இன்றுவரை திருகோணமலை சார்பான மக்கள் பிரதிநிதிகள் எவரும் நிரப்பவில்;லை என்பது திருகோணமலை வாழ் தமிழ் மக்களின் துரதிஸ்டம் என்றே கூறமுடியும். இதற்கு சிறந்த உதாரணம் சம்பூர் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அவலநிலை குறித்து இது வரையில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகளும் காத்திரமான செயற்பாட்டை முன்னெடுக்காது இருப்பதாகும். எனவே எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் எமது தங்கத்துரை அவர்களின் வழிகோலியே அமையவேண்டும் மேலும் அவர் பெயர் திருகோணமலை தமிழ் சமூகம் வாழும் வரை வாழவேண்டும்.

20

02 2012

மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

மட்./ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் தங்கவடிவேல் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன், இங்கு மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும், மாணவர்களின் அணிவகுப்பும், விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதன் போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பிரதம அதீதி வெற்றிக்கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்

20

02 2012

பயத்தில் அமெரிக்கா செல்ல தயங்கும் பீரிஸ்! – ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்க இன்று பயணமானார்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல மாட்டார் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் எழுதிய கடிதம் ஒன்றில், மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வந்து பொறுப்புக்கூறுதல், நல்லிணக்கம், வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் மற்றும் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டிருந்தார்.

இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பீரிஸ் ஆலோசிக்கலாம் என்றும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பீரிஸ் தற்போது அமெரிக்க பயணம் செய்தால், ஹிலாரி கிளின்ரனுக்கு அளித்த உறுதிமொழிகள் தொடர்பில் அறிக்கை வெளியிடவேண்டி வரலாம் என அஞ்சியே அமெரிக்கா செல்லத் தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அடுத்த மாதம் அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதே அமெரிக்கா செல்வதற்கான தடையாக உள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

20

02 2012