திருகோணமலையில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் சம்பவம்
திருகோணமலை நகரின் விநாயகபுரம் பகுதியில் அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்களால் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இரவு 7 மணியளவில் 30 ற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் ஒன்று திரண்டு வீதிகளில் பயணித்தவர்கள் வீடுகளுள் தங்கியிருந்தவர்களென பலரையும் தாக்கியுள்ளனர்.
இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்களை தடுக்க முற்பட்டவேளை மகன் மற்றும் தந்தை இருவரையும், தாக்குதலில் ஈடுபட்டிருந்த அனைவரும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரின் மத்திய பேருந்து நிலையப்பகுதியில் குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி அவர்கள் சென்று அந்தக் குழுவினரை விரட்டியடித்தனர். எனினும் எவரும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.